டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், நடுவரின் தவறால் வங்கதேச அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா – வங்கதேசத்திற்கு எதிரான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
எளிதான இலக்கை துரத்தும் முடிவோடு களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக விளையாடினாலும், அதன் தோல்விக்கு துரதிருஷ்டமும், நடுவரின் தவறான முடிவுமே காரணமாக இருந்தது. ஏனெனில், பார்ட்மேன் வீசிய 17வது ஓவரின் 2வது பந்தில் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா காலில் அணிந்திருந்த பேடில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஆனால், தென்னாப்பிரிக்க அணியினர் அவுட் கேட்டு அப்பீல் செய்தனர். உடனடியாக, நடுவரும் அவுட் கொடுத்ததால், மஹ்மதுல்லா டிஆர்எஸ் அப்பீல் கோரினார்.
இதையும் படிக்க:
விராட் கோலி படத்துடன் செயின் – சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆன பாகிஸ்தான் ரசிகை!
அப்போது மூன்றாவது நடுவர் சோதனை செய்தபோது, அந்த பந்து லெக் ஸ்டம்பை மிஸ் செய்தது நன்றாகவே தெரிந்தது. இதனால், அந்த பவுண்டரி வங்கதேச அணியின் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஐசிசி விதிமுறைப்படி, டிஆர்எஸ் சோதனையின்போது, நடுவர் அவுட் என்று கூறியது, மீண்டும் நாட் அவுட் என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த ரன்கள் சேர்க்கப்படாது. ஐபிஎல் தொடரில் இது பலமுறை நடந்துள்ளது. வங்கதேச அணிக்கு அந்த பவுண்டரி கிடைத்திருந்தால், எளிதில் வெற்றிபெற்றிருக்கும்.
ஐசிசியின் தவறான விதியால் டி20 உலகக் கோப்பை தொடரில் முக்கியமான போட்டியில் வங்கதேச அணி தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே, ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)