• Login
Sunday, August 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் தொடர்வார் | Rohit will continue as captain till ICC Champions Trophy

GenevaTimes by GenevaTimes
January 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் தொடர்வார் | Rohit will continue as captain till ICC Champions Trophy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரை கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்வார் என்றும், அடுத்த கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் தெரியவந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில தொடர்களில் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மோசமாக உள்ளது. அவரது தலைமையிலான பல போட்டிகளில் தோல்வி கண்டது. மேலும் அவரது பேட்டிங்கும் மோசமாகியுள்ளது. இதுதொடர்பாக விமர்சகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டித் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித்தை மாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரை ரோஹித்தே இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்றும், அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

2024-ம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டது. இதில் 4 போட்டிகள் உள்நாட்டில் நடைபெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் நடத்துகிறது. இருந்தபோதும் இந்திய அணி, ஹைபிரிட் மாடலில் தனது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் விளையாடவுள்ளது. ஒருவேளை இந்திய அணி அரை இறுதி, இறுதிக்கு முன்னேறினால் அந்த போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

Jayalalithaa’s Assets: ’ஜெயலலிதாவின் சொத்துக்களை ஜெ.தீபாவுக்கு தர முடியாது!’ அதிரடி காட்டிய நீதிமன்றம்!

Next Post

2025 ஆண்டிற்கான வருமான வரி வரம்பு..! எந்த முறை சிறந்தது? பழைய முறையா? புதிய முறையா?

Next Post
2025 ஆண்டிற்கான வருமான வரி வரம்பு..! எந்த முறை சிறந்தது? பழைய முறையா? புதிய முறையா?

2025 ஆண்டிற்கான வருமான வரி வரம்பு..! எந்த முறை சிறந்தது? பழைய முறையா? புதிய முறையா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin