• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்… அச்சத்தில் மக்கள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்… அச்சத்தில் மக்கள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 6:47 AM IST

அமெரிக்கா, இஸ்ரேலுடனான விரோதத்தை தீர்க்க துபாய், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தும் தாக்குதலால் அங்கு வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

News18
News18

அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், துபாய், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி அழித்ததாகவும் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்று குவித்ததாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தை தாக்கி அழித்த ஈரான், குடியிருப்பு பகுதிகளிலும் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.

மேலும், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜுமைரா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், கத்தாரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் ஈரானின் ஏவுகணை விழுந்து நொறுங்கியது.

இதனிடையே, உலகளவில் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 கோடியே 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் சவுதியில் 2 கோடியே 45 லட்சமும், குவைத்தில் ஏறத்தாழ 10 லட்சம் இந்தியர்களும் வசிக்கும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் பணியில் இந்திய தூதரகங்கள் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக கைவிட வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்… அச்சத்தில் மக்கள்!

Read More

Previous Post

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இலங்கைக்கு வெற்றியிலக்கு 213 ஓட்டங்கள்

Next Post

சபாவில் மெல்ல குறையும் வெள்ளம்; 6,462 பேர் இன்னும் முகாம்களில் தஞ்சம்! | Makkal Osai

Next Post
சபாவில் மெல்ல குறையும் வெள்ளம்; 6,462 பேர் இன்னும் முகாம்களில் தஞ்சம்! | Makkal Osai

சபாவில் மெல்ல குறையும் வெள்ளம்; 6,462 பேர் இன்னும் முகாம்களில் தஞ்சம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin