மலேசியாவின் முன்னணி தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், 2024 -2025 ஆம் ஆண்டுகளுக்கான பல்வேறு திட்டங்களில் இருந்து 829 பட்டதாரிகளின் கல்வி சாதனைகளைக் கொண்டாடும் வகையில் அதன் 16ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் கிரேட் ஹாலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மஇகா (MIC) தலைவரும், மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் (MIED) தலைவருமான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான மொத்தம் 829 பட்டதாரிகளுக்கு ஏழு கல்வி திட்டத்தில் இருந்து பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவத்துறையில் 167 பேரும், பல் மருத்துவத்தில் 76 பேரும், மருந்தியல் துறையில் 76 பேரும், அறிவியல் துறையில் 50 பேரும், சுகாதார அறிவியல் துறையின் 247 பேரும் அடங்குவர். இதில் பராமரிப்பு நர்சிங், முதுகலை நர்சிங் சான்றிதழ்களும் அடங்கும். கூடுதலாக, பொறியியல், கணினி தொழில்நுட்பத் துறையில் இருந்து 20 பேரும், வணிக மேலாண்மைத் துறையில் 161 பேரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகம் 10 முனைவர் பட்டங்களையும் (பிஎச்டி) 22 முதுகலைப் பட்டங்களையும் வழங்கியது. இந்தியா, பாகிஸ்தான், சூடான், நைஜீரியாவைச் சேர்ந்த அனைத்துலக பட்டதாரிகளின் சாதனைகளையும் இந்த பட்டமளிப்பு விழாவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தாக்கத்தையும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற சில மாணவர்கள்
நர்சிங் துறையில் பட்டம் பெற்ற சுங்கைபட்டாணி, கூலிமைச் சேர்ந்த கே.பிரேமலதா (K.Premalatha), ஹேமாஷினி தேவராஜு (Himashene Devaraju) ஆகியோர்
பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தனா ரவி (Keerthana Ravee) எம்பிபிஎஸ் துறையில் பட்டம் பெற்ற போது
சைலேந்திரா ராமநாகரன் (Shaillendra Ramanagaran) பொறியியல் துறையில் தனது பட்டத்தை பெற்றார். இவர் பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவராவார்.
பட்டர்வொர் வட்டாரத்தைச் சேர்ந்த தர்னிஷா சுகுமாரன் (Daarnisha Sugumaran), சுங்கை பட்டாணியை சேர்ந்த லிங்கேஸ் ராவ் மூர்த்தி (Lingess Rao Moorthy) ஆகியோர் தங்களின் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில்
ஜோகூரைச் சேர்ந்த மித்ராதேவி கோவலன் (MITHRADEVI GOVALAN) எம்பிபிஎஸ் துறையில் பட்டம் பெற்ற பின்பு அவரின் குடும்பத்தாருடன்
மேலாண்மை தகவல் துறையில் பட்டம் பெற்ற தேவ சுரேந்திர செல்வராம் DevaaSurendraa Silvadram தனது குடும்பத்தாருடன்… இவர் சுங்கைபட்டாணியை சேர்ந்தவராவார்.
The post ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா; 829 மாணவர்கள் தங்கள் துறைகளில் பட்டம் பெற்றனர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.






