• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – மதபோதகர் தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 29, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஏமனில் கேரள நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – மதபோதகர் தகவல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருவனந்தபுரம் ,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). ஏமன் நாட்டில் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த இவர், அதேநாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்தோவுடன் இணைந்து நிமிஷா பிரியா ஏமனில் மருத்துவமனை தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த வழக்கை விசாரித்த ஏமன் கோர்ட்டு, 2020-ம் ஆண்டு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை எதிர்த்து நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏமன் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அவருக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டது. இதற்கிடையே நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய அவரது தரப்பினர் மற்றும் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.

அதேவேளை, பின்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காந்தபுரம் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் தலையீட்டை தொடர்ந்து நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏமனில் கேரள நர்சு நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மரண தண்டனை தற்காலிமகாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் கிராண்ட் முப்தி அபூபக்கர் முசலியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனிநபர்கள் கூறும் தகவல்களில் உண்மையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

சென்னையில் சிஎன்ஜி தட்டுப்பாடு… ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் அவதி

Next Post

தென்னகோன் முன்பிணை மனு; ஓஐசிக்கு நோட்டீஸ்

Next Post
தென்னகோன் முன்பிணை மனு; ஓஐசிக்கு நோட்டீஸ்

தென்னகோன் முன்பிணை மனு; ஓஐசிக்கு நோட்டீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin