Last Updated:
பிப்ரவரி 1, 2026 முதல் புகையிலை பொருட்களுக்கான புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன
1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘வருமான வரிச் சட்டம் 2025’ வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.
வரி விகிதங்களை மாற்றுவதை விட, குழப்பமான வரி விதிகளை எளிமையாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி தொடர்பான சட்டப் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று வரி செலுத்தும் முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதும், ஆவணங்களைச் சமர்ப்பிப்பதை எளிதாக்குவதும் இந்தச் சட்டத்தின் இலக்காக உள்ளது.
பழைய முறையில் இருந்த “முந்தைய ஆண்டு” (Previous Year) மற்றும் “மதிப்பீட்டு ஆண்டு” (Assessment Year) ஆகிய குழப்பமான வார்த்தைகளுக்குப் பதிலாக, இனி “வரி ஆண்டு” (Tax Year) என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படும்.
புதிய சட்டம் வந்தாலும், தற்போதைய வருமான வரி விகிதங்களில் (Slabs) எந்த மாற்றமும் இருக்காது. பழைய வரி விகிதங்களே நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி முறையின்படி ரூ. 4 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. இது சம்பளம் பெறுபவர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் (MSMEs) பெரும் பயனாக இருக்கும். வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களுக்கான TCS விகிதங்களில் ஏப்ரல் 1, 2025 முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 10 லட்சம் வரை மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு TCS கிடையாது.
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்.. வருமான வரி செலுத்துவோருக்கான முக்கிய தகவல்..


