• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளில் பிரதமர் மோடி பாராட்டு | PM Modi felicitates on Border Security Force Establishment Day

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளில் பிரதமர் மோடி பாராட்டு | PM Modi felicitates on Border Security Force Establishment Day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: எல்லை பாதுகாப்புப் படை நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. அப்போது பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் கடும் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த 1965-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) உருவாக்கப்பட்டது. மத்திய ஆயுதப்படையான இது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இதில் இப்போது 192 படைப்பிரிவுகள் உள்ளன. 2.65 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 6,386 கி.மீ. எல்லையை இவர்கள் பாதுகாக்கின்றனர்.

பிஎஸ்எப்-ன் நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “எல்லை பாதுகாப்புப் படையின் நிறுவன நாளை முன்னிட்டு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் விதிவிலக்கான சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியமான பாதுகாப்பு வரிசையாக எல்லைப் பாதுகாப்புப் படை திகழ்கிறது. அவர்களின் விழிப்புணர்வும் தைரியமும் நமது தேசத்தின் பாதுகாப்புக்கு பங்களிக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “பிஎஸ்எப் வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நிறுவன நாள் வாழ்த்துகள். பிஎஸ்எப் வீரர்கள் பாரதத்தின் கவுரவத்தையும் லட்சியங்களையும் மிகக் கடுமையான உறுதியுடன் பாதுகாத்து வருகின்றனர். அதற்காக தங்கள் உயிரைக் கொடுக்க அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. அவர்களின் வீரமும் தியாகமும் நமக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் தேச பக்தியையும் வளர்க்கிறது. பணியின்போது உயிர் தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு எனது புனிதமான அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பக்கத்தில், “நம் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பிஎஸ்எப் வீரர்கள் ஈடுசெய்ய முடியாத துணிச்சலுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாதுகாக்கின்றனர். அவர்களுடைய தியாகத்துக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.



Read More

Previous Post

வவுனியா – சேமமடுவில் வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

Next Post

பிரபல மாடல் கடத்தல்! துப்பாக்கி முனையில் பயங்கரம்!

Next Post
பிரபல மாடல் கடத்தல்! துப்பாக்கி முனையில் பயங்கரம்!

பிரபல மாடல் கடத்தல்! துப்பாக்கி முனையில் பயங்கரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin