இலங்கையில் மின்சார வாகனங்கள் (EV) வைத்திருப்போர் அனைவருக்கும் அந்த நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்க ஒரு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரப் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் Peak Hours நேரங்களில் வாகனங்களைச் சார்ஜ் செய்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரவு நேர சார்ஜிங்கால் மின் விநியோகக் கட்டமைப்பில் மேலதிகமாக 300 மெகாவாட் சுமை ஏற்படுகிறது
எனவும் பகல் நேரங்களில் தாராளமாக வாகனங்களை ரீசார்ஜ் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் உடனடியாக மின்வெட்டு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அனால், மத்திய கிழக்கு போர்ச் சூழல் கணிக்க முடியாததாக இருப்பதால், எதிர்காலக் கட்டுப்பாடுகள் குறித்து இப்போதே திட்டவட்டமாக எதனையும் கூற முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை, கவர்ச்சிகரமான இன்டீரியர் (Interior), குறைந்த வரி மற்றும் பெட்ரோல் செலவு மிச்சம் எனப் பல காரணங்களால் எலக்ட்ரிக் கார்களை வாங்கி குவித்த மக்களுக்கு, இந்தத் தற்காலிகக் கட்டுப்பாடு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
“பெட்ரோல் தேவையில்லை என்றுதானே எலக்ட்ரிக் கார் வாங்கினோம்.. ஆனால் அந்த மின்சாரத்தைகே கூட எரிபொருளை பாவனை தீர்மானிக்கிறதே! என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.




