சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்காமல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வுபெற்றதால் ஏமாற்றம் அடைந்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர தேர்தலை முன்னிட்டு தனியார் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த வழக்கில் சந்திரசூட் நீதி வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக இருந்துவிட்டதாகக் கூறினார். சந்திரசூட் ஒரு நீதிபதிக்கு பதிலாக சட்டத்தில் விரிவுரையாளராக இருந்திருந்தால், அவர் இன்னும் பரவலான புகழைப் பெற்றிருப்பார் என்றும் சாடினார்.
மேலும், தற்போதைய பாஜக தலைமையை “தந்திரமானவர்கள்” என்று குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் மிகவும் மரியாதை கொடுப்பவர்கள் என்று கூறினார்.
Also Read | “நடுக்கடலில் எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடியா?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இன்றைய பாஜகவுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் தலைமையிடம் மனிதாபிமானம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘யூஸ் அண்ட் த்ரோ’ என்ற மனநிலையில் தான் இன்றைய பாஜக தலைமை இருப்பதாகவும், ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தாலும் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகக்கூட ஆக முடியாது என்றார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)