• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம் | 25 lakh migrant workers in MSME companies

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களில் 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்: மேற்கு வங்க முதல்வர் அழைப்பால் தொழில்முனைவோர் கலக்கம் | 25 lakh migrant workers in MSME companies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: தமிழகத்​தில் உள்ள சிறு, குறு மற்​றும் நடுத்தர (எம்​எஸ்​எம்இ) தொழில் நிறு​வனங்​களில் 25 லட்​சம் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிவரும் நிலை​யில், மேற்கு வங்க முதல்​வரின் சலுகை அறி​விப்​பால் தொழில் துறை​யினர் கலக்​கமடைந்துள்ளனர்.

உற்​பத்தி மற்​றும் சேவைத் துறை​களில் தேசிய அளவில் சிறந்து விளங்​கும் தமிழகத்​தில், அடிப்​படைப் பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் பற்​றாக்​குறை அதி​கம் உள்​ளது. இதனால், ஒடி​சா, உத்தரபிரதேசம், பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இப்​பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர்.

தொடக்​கத்​தில் கட்​டு​மானம், நூற்​பாலை, மருத்​து​வ​மனை, ஓட்​டல் போன்ற துறை​களில் மட்​டும் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிய நிலை​யில், தற்​போது சரக்கு வாக​னம் ஓட்​டு​தல், தூய்​மைப் பணி, விவ​சாயப் பணி உள்​ளிட்ட பெரும்​பாலான துறைகளில் அதிக எண்​ணிக்​கை​யில் பணிபுரி​கின்​றனர்.

அண்​மை​யில், மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, வேலை ​வாய்ப்​புக்​காக பிற மாநிலங்​களுக்கு சென்​றுள்ள தொழிலா​ளர்​கள் மீண்​டும் ஊர் திரும்​பி​னால், ஊக்​கத்​தொகை​யாக ரூ.5,000 மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என உறுதி அளித்​துள்​ளார்.

இந்த அறி​விப்​பு, புலம்​பெயர் தொழிலா​ளர்​களை நம்​பி​யுள்ள தமிழக தொழில் துறை​யினரை கலக்​கமடையச் செய்​துள்​ளது. இதுகுறித்து தமிழ்​நாடு அனைத்து தொழில்​முனை​வோர் சங்க மாநிலப் பொதுச் செய​லா​ளர் ஜெய​பால் கூறிய​தாவது: தமிழகத்​தில் 50 லட்​சம் எம்​எஸ்​எம்இ நிறு​வனங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். தொடக்​கத்​தில் கட்​டு​மானத் தொழிலில் மட்​டுமே பலர் பணி​யாற்றி வந்த நிலை​யில், தற்​போது உற்​பத்தி மற்​றும் சேவைப் பிரிவு​களின் கீழ் உள்ள பெரும்​பாலான தொழில் நிறு​வனங்​களில் அவர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

அடிப்​படைப் பணி​களில் ஈடு​பட்​டுள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு தொழிலைக் கற்​றுக்​கொடுத்​து, தங்​குமிடம் கொடுத்​து, ஊக்​கத்​தொகை உள்​ளிட்ட சலுகைகளு​டன் தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் இல்​லாத துறையே இல்லை என்ற நிலை உள்​ளது.

இத்​தகைய சூழ்​நிலை​யில், அண்​மை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, புலம்​பெயர்ந்த தொழிலா​ளர்​கள் மீண்​டும் மேற்​கு​வங்க மாநிலத்​துக்கு திரும்​பி​னால் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.5,000 ஊக்​கத்​தொகை​யுடன் வேலை​வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். இந்த அறி​விப்பு தொழில்​முனை​வோர் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பது வட மாநிலங்​களை சேர்ந்த ஒப்​பந்​த​தா​ரர்​கள்​தான். இவர்​களில் புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு உதவும் வகை​யில் ஓட்​டல் உள்​ளிட்ட பல்​வேறு வணி​கத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஒரு தொழிலா​ளிக்கு ரூ.600 தினசரி ஊதி​யம் நிர்​ண​யிக்​கப்​பட்​டால், அதில் ரூ.30 வரை ஒப்​பந்​த​தா​ரர்​கள் எடுத்​துக் கொள்​வார்​கள். தொழில் துறை​யினரிட​மும் கமிஷன், தொழிலா​ளர்​களிட​மும் கமிஷன் பெற்று வரு​கின்​றனர்.

தொழில் நிறுவன உரிமை​யாளர்​கள் கூறு​வதை​விட, தங்​களை பணிக்கு சேர்த்​து​விட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள் கூறு​வதைத்​தான் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் கேட்டு நடப்​பார்​கள். தமிழகத்​தில் உள்ள வடமாநில ஒப்​பந்​த​தா​ரர் ஒரு​வர் மாதம் ரூ.12 லட்​சம் கமிஷன் தொகையை பெற்று வரு​கிறார். பணத்தை வழங்கி தொழிலா​ளர்​களை அழைத்து வர வேண்​டும் என்று கூறி​னால், 500, 1,000 தொழிலா​ளர்​களை பணிக்கு அனுப்​பிவைக்​கும் திறன் கொண்​டுள்​ளார்.

இத்​தகைய ஒப்​பந்​த​தா​ரர்​கள் வேறு மாநிலத்​துக்கு சென்​று​விட்​டால் தமிழ்​நாட்​டில் பல்​வேறு துறை​கள் ஸ்தம்​பிக்​கும் அபா​யம் உள்ளது. எனவே, மேற்​கு​வங்க முதல்​வர் போன்​றவர்​கள் தொடர்ந்து சலுகை அறி​விப்​பு​களை வெளி​யிட்டு வந்​தா​லும், புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தக்​க​வைத்​துக்​கொள்ள தேவை​யான நடவடிக்​கைகளை தமிழக முதல்​வர் உடனடி​யாக மேற்​கொள்ள வேண்டும். அதுவே இப்​பிரச்​சினைக்கு தீர்​வாகும். இவ்​வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன? | team india Cheteshwar Pujara retires from cricket

Next Post

சாலை விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட வேளையில் நான்கு பேர் காயம் | Makkal Osai

Next Post
சாலை விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட வேளையில் நான்கு பேர் காயம் | Makkal Osai

சாலை விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட வேளையில் நான்கு பேர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin