
எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், எப்ஸ்டீன் தான் டிரம்ப்-க்கு தன்னை அறிமுகப்படுத்தினார் என்ற வதந்திகளும், மெலானியா டிரம்புடன் தனிப்பட்ட உறவு இருந்ததாக கூறப்படுவதும் அனைத்தும் ஆதாரமற்றவை என்று விளக்கப்பட்டது.
“எப்ஸ்டீன் அல்லது கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் எனக்கு எந்தவொரு உறவும் இருந்ததில்லை,” என்று மெலானியா டிரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையும் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, மெலானியா டிரம்பை எப்ஸ்டீனுடன் இணைக்கும் எந்தவொரு தகவலும் தவறானது என தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பதிலாக வெளியாகியுள்ளது.

