Last Updated:
தனக்கும் தன் சகோதரி பிரியங்கா காந்திக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்ததாக வயநாடு கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
தனக்கும் தனது சகோதரிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், வயநாடு வந்ததும் அவர் எல்லாவற்றையும் மறந்து தன்னிடம் பேசியதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், கேரளா மாநிலம், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு தொகுதிக்கு வருகை தந்தனர். குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 300 பேர் பரிதாபமாக பலியாகினர். பல்லாயிரம் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், தொழில்களையும் இழந்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்தவர்களுக்கு காங்கிரஸ் தரப்பில் வீடு கட்டித் தர முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் நடைபெற்றது. இதில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றனர்.
You know, brothers and sisters fight over silly things. Yesterday we had a small argument, and she wasn’t talking to me.
This morning she still looked upset, but the moment we landed here, she was smiling and talking as usual. That is the magic of the people of Wayanad.
: LoP… pic.twitter.com/vqD5LuUrdJ
— Congress (@INCIndia) February 26, 2026
இந்நிலையில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கும் தனது சகோதரிக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தன்னிடம் பேசாமல் இருந்ததாகவும், வயநாடு வந்ததும் அவர் எல்லாவற்றையும் மறந்து தன்னிடம் பேசியதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தான் வயநாட்டின் மேஜிக் என்றும் ராகுல் காந்தி கூறினார்.


