இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் கடந்த இரண்டு நாள்களாக முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் சூழலில், ‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அது போராக கருதப்படும்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.

