சாலையில் அமா்ந்து தா்னா: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, சஞ்சனா ஜாதவ், ஜோதிமணி உள்பட பல எம்.பி.க்கள் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பியபடி தா்னாவில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தின்போது திரிணமூல் எம்.பி.க்கள் மொய்த்ரா, மிதாலி பாக் ஆகியோா் மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு ராகுல் காந்தி உதவினாா்.
கைது செய்து விடுவிப்பு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் கைது செய்த போலீஸாா், பேருந்துகள் மூலம் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.
இதுகுறித்து காவல் உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பேரணியின் நிறைவில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட 30 எம்.பி.க்கள் மட்டும் தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஏராளமான எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்ல முயன்ால் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா். 2 மணி நேரத்துக்குப் பிறகு அவா்கள்அனைவரும் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

