கங்கார்,
பெர்லிஸ் மாநில உள்ளூர் ஆட்சி அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அமலாக்க உதவியாளர் மற்றும் கட்டிடத்துறையின் உதவி செயலாளர் ஆகிய இருவரும் RM70,000 வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில், இன்று முதல் 7 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 61 வயது ஓய்வுபெற்ற ஆண் மற்றும் 37 வயது பெண் அதிகாரி மீது, 2022 முதல் 2024 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வீட்டு மறுசீரமைப்பு அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களிடம் இருந்து RM300 முதல் RM9,000 வரை லஞ்சம் கேட்டும், பெற்றும் இருந்ததாக கூறப்படுகிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC)-இன் தகவலின்படி, இந்த இருவரும் பணம் பெற்றதை ஆண் நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பெற்று , பின்னர் அந்த தொகையை பெண் அதிகாரியுடன் பகிர்ந்துள்ளார் என நம்பப்படுகிறது.
கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று இருவருக்கும் காவல் உத்தரவு பிறப்பித்தது.
பெர்லிஸ் MACC இயக்குநர் முகமட் நோர் அதா அப்துல் ஃகனி, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், இந்த வழக்கு MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (a)-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
The post ஊழல் மற்றும் லஞ்சம்: பெர்லிஸ் நகராட்சி முன்னாள் பணியாளர் உட்பட இருவர் 7 நாட்கள் காவல் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

