Last Updated:
பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத், பிசிசிஐ மீது ஊக்க மருந்து சோதனையில் மோசடி குற்றஞ்சாட்டியுள்ளார். ஐசிசி, இந்திய வீரர்களுக்கு சோதனை செய்யவில்லை என்றும் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் மோசடி செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, இந்தியாவை தவிர்த்து உலகின் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் ஊக்க மருந்து சோதனையை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ-யே ஊக்க மருந்து சோதனை நடத்துவதாகவும், சோதனை மாதிரிகள் மற்றும் முடிவுகளை கூட ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கவுன்சில் வழங்குவது இல்லை எனவும் அகமது சேஷாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மற்ற தொழில்நுட்பங்களில் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என பிசிசிஐ-யே தங்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளை அறிவித்து வருவதாகவும் அகமது சேஷாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊக்க மருந்து பரிசோதனையை நடத்தும் போது ஐசிசி இரட்டை நிலப்பாட்டைக் கடைப்பிடிப்பதாக சேஷாத் குறிப்பிட்டார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத்தின் குற்றச்சாட்டு சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


