Last Updated:
லயன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது நித்திஷ் ரானா களத்தில் இருந்தார்
டெல்லியில் நடைபெற்று வரும் டெல்லி பிரிமியர் லீக் தொடரின்போது கிரிக்கெட் வீரர்கள் நிதிஷ் ரானா மற்றும் திக்வேஷ் ரதி ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், இருவருக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தால் டெல்லி பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது தலைநகரில் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை மிகப்பெரிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதுதான் இந்த டெல்லி பிரிமியர் லீக்கின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த தொடரில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். டெல்லி மாநில அணிக்கான வீரர்களும் இந்த தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த நிலையில், இந்த தொடரில் இடம் பெற்றுள்ள பெஸ்ட் டெல்லி லயன்ஸ் மற்றும் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார் அணிகள் நேற்று மோதின.
அடுத்த அவர் பந்து வந்தபோது நித்திஷ்ரானா அதனை விளையாடாமல் விலகினார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நித்திஷ் ராணாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீத அபராதமும் விக்னேஷ் ரதிக்கு 80 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
August 30, 2025 7:00 PM IST


