• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் | PM Modi appeals to traders to sell only domestic products

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் | PM Modi appeals to traders to sell only domestic products
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது.

இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.

இதே​போல டெல்​லி​யின் அலிப்​பூர் முதல் டிச்​சான் கலான் பகுதி வரை ரூ.5,580 கோடி​யில் நகர்ப்​புற விரி​வாக்க சாலை அமைக்கப்பட்டு உள்​ளது. டெல்​லி​யின் 3-வது ரிங் சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்து வைத்​தார். டெல்லி ரோஹினி பகு​தி​யில் நடந்த விழா​வில் அவர் பேசி​ய​தாவது: டெல்​லி​யின் போக்​கு​வரத்து கட்டமைப்புகளை மேம்​படுத்த மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

புதி​தாக திறக்​கப்​பட்​டிருக்​கும் இரு நெடுஞ்​சாலைகளால் வியா​பாரி​கள், விவ​சா​யிகள், பொது​மக்​கள் பெரிதும் பயன் அடைவார்கள். டெல்லி மக்​களின் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​பட்டு வரு​கிறது. குறிப்​பாக யமுனை நதி தூய் மைப்​படுத்​தப்​படு​கிறது. காற்று மாசுவை கட்​டுப்​படுத்த பல்​வேறு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. டெல்​லி​யில் தற்​போது 650 மின்​சார பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த எண்​ணிக்கை 2,000 ஆக உயர்த்​தப்​படும்.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மிக முக்​கிய கோப்​பு​கள் மிக நீண்ட கால​மாக தேங்கி கிடந்​தன. பாஜக ஆட்​சிக் காலத்​தில் கோப்​பு​கள் விரை​வாக நகர்​கின்​றன. வளர்ச்​சித் திட்​டங்​கள் வேகம் பெற்​றுள்​ளன. கடந்த 11 ஆண்​டு​களில் சாலை, ரயில், விமான போக்​கு​வரத்து கட்​டமைப்​பு​கள் கணிச​மாக மேம்​படுத்​தப்​பட்டு உள்​ளன.

விரை​வில் ஜிஎஸ்டி வரி குறைக்​கப்பட உள்​ளது. எனவே வரும் தீபாவளி பண்​டிகை பொது​மக்​களுக்கு இரட்டை தீபாவளி​யாக அமை​யும். அனைத்து தரப்பு மக்​களுக்​கும் இரட்டை போனஸ் கிடைக்​கும். கடந்த காலத்​தில் காதித் துறை நலிவடைந்த நிலை​யில் இருந்​தது. பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு காதித் துறை தொடர்ந்து வலு​வடைந்து வரு​கிறது. காதி விற்​பனை 7 மடங்கு வரை அதி​கரித்து உள்​ளது.

ஒரு காலத்​தில் வெளி​நாடு​களில் இருந்து மொபைல் போன்​களை இறக்​குமதி செய்து வந்​தோம். இப்​போது ஓராண்​டில் சுமார் 35 கோடி மொபைல்​போன்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படு​கின்​றன. இவை வெளி​நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்றன. இந்த நேரத்​தில் இந்​திய வியா​பாரி​களிடம் ஒரு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன்.

இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்​டுமே நீங்​கள் விற்​பனை செய்ய வேண்​டும். வெளி​நாட்டு பொருட்​களை விற்பனை செய்​வதை தவிர்க்க வேண்​டும். இதே​போல நாட்டு மக்​கள் அனை​வரும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட பொருட்​களை மட்டுமே வாங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.



Read More

Previous Post

ஆசிய கோப்பை தொடருக்கான பாக். அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட பாபர் அசம், ரிஸ்வான் | babar azam rizwan sidelined in pakistan t20i squd for asia cup cricket

Next Post

ஆயிரக்கணக்கான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் | Makkal Osai

Next Post
ஆயிரக்கணக்கான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் | Makkal Osai

ஆயிரக்கணக்கான ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin