மியான்மாரின் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மின் ஜின் என்பவர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவு பார்த்தல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் மியான்மார் ஆகிய இரு நாட்டு குடியுரிமைகளையும் கொண்ட இந்த ஆய்வாளர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்
இந்த நிலையில் அவரின் கைதைச் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மியான்மாரின் மூலோபாய மற்றும் கொள்கை நிறுவனத்தின் நிறுவனரான மின் ஜின், மியான்மார் எல்லைக்கு அருகிலுள்ள சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இருக்கும் குன்மிங் நகரில் கடந்த ஜூன் மூன்றாம் திகதி அன்று காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவுத்துறை நடவடிக்கை
மியான்மாரின் தற்போதைய அரசியல் மற்றும் உள்நாட்டு மோதல்கள் குறித்து நடுநிலையான விமர்சனங்களை எழுதி வந்த இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்.

இந்தக் கைது விவகாரம் குறித்துச் சீனாவுக்கான அமெரிக்க தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைதானவருக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

