Last Updated:
ரிக்கெல்டன் 16 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்த கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் வெளியேறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியிடம் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது.
தற்போதைய சூழலில் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன.
இந்நிலையில், இந்தப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை எடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 56.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் தொடங்கி விளையாடி வருகிறது.
அந்த அணியின் மூத்த வீரர் மார்க்ராம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முல்டர் 6 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிக்கெல்டன் 16 ரன்கள் சேர்த்தார். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்த கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் வெளியேறினார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை விடவும் தென்னாப்பிரிக்கா அணி 117 ரன்கள் பின்தங்கி உள்ளது.
June 12, 2025 5:07 PM IST


