உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு நேரடியாக விண்ணப்பம் அளித்துள்ளது.
இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. செஸ் உலகில் மகுடம் சூடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இந்த போட்டியை நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை சிறப்பாக நடத்தியதால், தமிழ்நாடு அரசையும் விண்ணப்பிக்குமாறு சர்வதேச செஸ் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதன்பேரில் சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு தனியாக விண்ணப்பித்துள்ளது.
இந்திய செஸ் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடத்தவதற்கும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிங்கப்பூர் அரசும் விருப்பம் தெரிவித்துள்ளது. எந்த நகரத்தில் போட்டியை நடத்த அனுமதி அளிப்பது என்பது தொடர்பாக சர்வதேச செஸ் கவுன்சில் அடுத்த வாரம் கூடி ஆலோசிக்கிறது.
இறுதி முடிவு இம்மாத இறுதியில் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)