இரண்டு நாள்களுக்கு முன்பு வரை, இரண்டு முறை தென் கரோலினா ஆளுநராக இருந்த நிக்கி ஹேலி – பஞ்சாபி சீக்கிய பெற்றோருக்கு பிறந்தவர் – 2024 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் அதிபர் வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சியின் முன்னணி வீரரான டொனால்ட் டிரம்பிற்கு கடும் போட்டியாளராக இருந்தார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியின்போது, ஐநாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர்.
சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஐந்து இந்திய-அமெரிக்க உறுப்பினர்களில் ஒருவராகவும் மற்றும் வாஷிங்டனின் 7வது காங்கிரஸ் மாகாண பிரதிநிதியாகவும் விளங்குகிறார்.
கடந்த ஆண்டு, அவரது சகோதரி சுசீலா ஜெயபால், ஓரிகான் மாகாணத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினராகும்ட முயற்சியைத் தொடங்கியிருந்தார்.
நியூ யார்க் மாகாண அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து அமெரிக்கரான உறுப்பினராக இருக்கும் பெண் ஜெனிபர் ராஜ்குமார், இவர், ஒரே ஒரு சட்டமன்றக் கூட்டத்திலேயே அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையை அறிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றார். இதன் மூலம், அந்த மாகாணாத்தில் தெற்காசிய சமூகத்தின் இதயங்களையும் கொள்ளைகொண்டால்.
கடந்த ஆண்டு, ஆந்திரத்தைச் சேர்ந்த அருணா மில்லர், மேரிலாந்து மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற புதிய வரலாற்றை எழுதினார்.
ஆஸ்திரேலியாவில், 2022 ஆம் ஆண்டில் ஸ்வானிலிருந்து நாட்டின் கீழவை பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவா வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தொழிலாளர் கட்சி எம்.பி. ஸனேடா.
இதுபோல உலக அரசியலில் பெண்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை அளிக்காவிட்டாலும், அந்த சிறு எண்ணிக்கையிலும் இந்தியப் பெண்களின் இருப்பானது நிச்சயம் பெருமைகொள்ள வைக்கிறது.