• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக அரசியலில் அரிதான சம்பவம்.. ரஷ்யாவில் திடீரென தரையிறங்கிய அமெரிக்க போர் ஜெட்.. ஷாக்கான சீனா? | China Closely Monitors Surprise US Military Landing in Moscow Amid Geopolitical Shifts

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
உலக அரசியலில் அரிதான சம்பவம்.. ரஷ்யாவில் திடீரென தரையிறங்கிய அமெரிக்க போர் ஜெட்.. ஷாக்கான சீனா? | China Closely Monitors Surprise US Military Landing in Moscow Amid Geopolitical Shifts
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Shyamsundar I

Time
Published: Tuesday, August 25, 2026, 20:13 [IST]

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே உக்ரைன் போர் காரணமாக கடுமையான பனிப்போர் சூழல் நிலவி வரும் நிலையில், மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று திடீரென தரையிறங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவில் அமெரிக்க விமானப்படை விமானம் திடீரென தரையிறங்கியுள்ள சூழலையும், அதன் பின்னணியில் உள்ள நகர்வுகளையும் சீனா மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தகவல்களை கண்காணிக்கும் Flightradar24 இணையதளத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட போயிங் சி-17 குளோப்மாஸ்டர் ரக ராணுவ விமானம் ஒன்று மாஸ்கோவிற்கு வந்தடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

US Air Force plane Moscow

எங்கிருந்து புறப்பட்டது இந்த ராணுவ விமானம்?

விமான கண்காணிப்பு தரவுகளின்படி, இந்த குளோப்மாஸ்டர் விமானம் வாஷிங்டன் டி.சி. அருகே உள்ள புகழ்பெற்ற கேம்ப் ஸ்பிரிங்ஸ் / ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ரூஸ் தளம் தான் அமெரிக்க அதிபர், துணை அதிபர் மற்றும் நாட்டின் உயர்மட்ட தூதர்கள், ராணுவ ஜெனரல்கள் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு பயன்படுத்தும் மிக முக்கியமான விமான தளமாகும்.

அங்கிருந்து புறப்பட்ட விமானம், ஆகஸ்ட் 23 அன்று லாட்வியா நாட்டின் ரிகா நகருக்கு சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு நேரடியாக மாஸ்கோவின் வ்னுகோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

எங்களுக்கு தகவல் இல்லை – க்ரெம்ளின் மாளிகையின் மர்ம பதில்

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய வான்வெளியில் மேற்கத்திய நாடுகளின் விமானங்கள் பறக்க கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க ராணுவ விமானம் மாஸ்கோவில் நுழைந்தது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இந்த விமானத்தின் வருகை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை” என்று ஒற்றை வரியில் பதிலளித்துள்ளார். மேலும், இந்த வாரம் அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகள் எவருடனும் எந்தவொரு அதிகாரப்பூர்வ சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ரகசிய தூதரக பேச்சுவார்த்தையா? கைதிகள் பரிமாற்றமா?

போயிங் சி-17 குளோப்மாஸ்டர் என்பது வழக்கமான பயணிகள் விமானம் அல்ல; இது துருப்புகள், கனரக போர் தளவாடங்கள், அதிநவீன பாதுகாப்பு வாகனங்களை நீண்ட தூரத்திற்கு ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட ராணுவ சரக்கு விமானமாகும். எனவே, இதன் திடீர் வருகை குறித்து பல்வேறு யூகங்கள் மற்றும் சர்வதேச ஆய்வுகள் கிளம்பியுள்ளன.

ரகசிய தூதரக சந்திப்பு

முன்னதாக கடந்த ஜனவரி மாதம், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க சிறப்பு தூதர்களான ஸ்டீவன் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் மாஸ்கோவிற்கு ஐரோப்பாவில் இருந்து நேரடியாக வந்திருந்தனர். அதன்பின்னர் ஐரோப்பாவில் இருந்து மாஸ்கோவிற்கு நேரடி விமானம் வந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான புதிய முன்முயற்சிகள் ரகசியமாகத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உக்ரைன் போன கேரள மாலுமி! ரஷ்ய தாக்குதலில் பலி! நெஞ்சை உருக்கும் சோகம்

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு உக்ரைன் போன கேரள மாலுமி! ரஷ்ய தாக்குதலில் பலி! நெஞ்சை உருக்கும் சோகம்

கைதிகள் பரிமாற்றம்

சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இரு நாடுகளுக்கும் இடையே ரகசியமாக கைதிகள் பரிமாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக, ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க மரைன் ராபர்ட் கில்மேன் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட உயர்மட்ட பரிமாற்றத்திற்காக இந்த ராணுவ விமானம் பயன்படுத்தப்படுகிறதா என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர்

தற்போது அமெரிக்க-ரஷ்ய உறவுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையிலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்து நிற்கும் சூழலிலும், இத்தகைய ரகசியப் பின்னணியிலான விமானப் பயணங்கள் சர்வதேச அரசியல் அரங்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும். வாஷிங்டன் வெள்ளை மாளிகையோ அல்லது பென்டகனோ இந்த விமானப் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.

உக்ரைன் வழக்கு: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி டிஒய் சந்திரசூட்க்கு மேஜர் பொறுப்பு வழங்கிய ரஷ்யா

உக்ரைன் வழக்கு: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி டிஒய் சந்திரசூட்க்கு மேஜர் பொறுப்பு வழங்கிய ரஷ்யா

கண்காணிக்கும் சீனா

மாஸ்கோவில் அமெரிக்க விமானப்படை விமானம் திடீரென தரையிறங்கியுள்ள சூழலையும், அதன் பின்னணியில் உள்ள நகர்வுகளையும் சீனா மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. உக்ரைன் போருக்குப் பிந்தைய சர்வதேச புவிசார் அரசியலில் ரஷ்யாவுடன் No-limits partnership உறவைப் பேணிவரும் பெய்ஜிங், அமெரிக்காவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே திரைமறைவில் ஏதேனும் தூதரகப் பேச்சுவார்த்தைகளோ அல்லது சமரச உடன்பாடுகளோ உருவாகிறதா என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. வாஷிங்டன் – மாஸ்கோ இடையேயான எந்தவொரு ரகசியத் தொடர்பும் தனது நிலையை எந்த வகையிலும் பலவீனப்படுத்திவிடக் கூடாது என்பதில் சீனா கூடுதல் கவனம் செலுத்துகிறது.

குறிப்பாக, ரஷ்யா – அமெரிக்கா இடையே புதிய அதிகார சமநிலை அல்லது சமாதானம் உருவாகும் பட்சத்தில், அது ஆசிய-பசிபிக் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை சீன வெளியுறவு அமைச்சக வல்லுநர்கள் கணித்து வருகின்றனர். உக்ரைன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து வரும் சீனாவுக்கு, இரு வல்லரசுகளின் இந்தத் திடீர் மர்ம நகர்வுகள் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்த விமானப் பயணத்தின் அடுத்தகட்ட விளைவுகளை பெய்ஜிங் தொடர்ந்து உன்னிப்பாக நோட்டமிட்டு வருகிறது.

English summary

China Closely Monitors Surprise US Military Landing in Moscow Amid Geopolitical Shifts

Read More

Previous Post

ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்

Next Post

சிஎஸ்கே அணியின் பங்குகளை கேட்ட மகேந்திர சிங் தோனி.. ஷாக் கொடுத்த அணி நிர்வாகம்! 

Next Post
சிஎஸ்கே அணியின் பங்குகளை கேட்ட மகேந்திர சிங் தோனி.. ஷாக் கொடுத்த அணி நிர்வாகம்! 

சிஎஸ்கே அணியின் பங்குகளை கேட்ட மகேந்திர சிங் தோனி.. ஷாக் கொடுத்த அணி நிர்வாகம்! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin