Last Updated:
இந்த நிகழ்வு இந்தியக் கலைஞர்களுக்கு சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது
வெனிஸில் நடைபெற்று வரும் 61-வது சர்வதேச கலைக் கண்காட்சியில் (La Biennale di Venezia), இந்தியாவின் தேசிய அரங்கின் திறப்பு விழாவின் போது, முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி ஆற்றிய உரை சமூக வலை தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
உலகின் மிக முக்கியமான கலை நிகழ்வுகளில் ஒன்றான ‘வெனிஸ் பைனாலே’ கண்காட்சியில், இந்தியக் கலையின் பரிணாம வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள கலாச்சார உறவுகள் குறித்து இஷா அம்பானி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாக இந்த அரங்கம் திகழ்கிறது.
நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் (NMACC) பிரதிநிதியாகப் பேசிய இஷா அம்பானி, தனது தாயார் நீடா அம்பானியின் அர்ப்பணிப்பையும், கலையின் மீதான அவரது ஆர்வத்தையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். “இந்தியாவின் சிறந்த கலைகளை உலகிற்கு எடுத்துச் செல்வதும், உலகின் சிறந்த கலைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதும்” என்ற NMACC-இன் உயரிய நோக்கத்திற்கு நீடா அம்பானியின் வழிகாட்டுதலே முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவை ஒரு ‘தாயகம்’ (Home) என்ற உன்னதமான கருத்தியலாக உருவகப்படுத்திப் பேசிய இஷா அம்பானி, இந்தியாவுக்கும் வெனிஸுக்கும் இடையே நீண்ட கால கலாச்சார உரையாடல் தொடர வேண்டும் எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். “நமது முன்னோர்கள் பெருமைப்படக்கூடிய மற்றும் நமது வருங்கால சந்ததியினர் உரிமையுடன் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கலாச்சாரப் பிணைப்பை நாம் உருவாக்கி வருகிறோம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு இந்தியக் கலைஞர்களுக்கு சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. உலகளாவிய கலைத் தளத்தில் இந்தியாவின் கலை மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுவதை இந்தத் தேசிய அரங்கம் உறுதி செய்கிறது. நவீனக் கலையும் பழங்காலப் பாரம்பரியமும் இணைந்து இந்தியாவை ஒரு கலைப் பொக்கிஷமாக உலகுக்குக் காட்டும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.,
“உலக அரங்கில் இந்தியக் கலை!” – வெனிஸ் சர்வதேச கண்காட்சியில் நெகிழ்ச்சி உரையாற்றிய இஷா அம்பானி


