Last Updated:
ஜெமிமா ரோட்ரிகஸ் ஒரு பிராண்டின் தூதுவராக செயல்பட 75 லட்ச ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.
உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி வீராங்கனைகளுக்கு விளம்பரங்களில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இதைப்போன்று ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருக்கும் வீராங்கனைகள் தங்களது விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையை 25 சதவீதம் முதல் 100% வரை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் பிசிசிஐ மூலமாக நேரடி சம்பளம் பெறுவதைத் தவிர்த்து பல்வேறு விளம்பரங்களின் தூதுவர்களாக விளம்பரங்களில் நடித்தும் வருமானத்தைப் பெறுகிறார்கள். இந்நிலையில் உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வென்றிருப்பதால் இந்திய வீராங்கனைகளுடைய மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக முன்னணி வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி சர்மா, ஷபாலி வர்மா உள்ளிட்ட வீராங்கனைகள் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இவர்களது சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடர்போரின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அதைத் தொடர்ந்து இந்த வீராங்கனைகள் தங்களது விளம்பரங்களுக்கான கட்டணத் தொகையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அரை இறுதி போட்டியின் போது 127 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ஒரு பிராண்டின் தூதுவராக செயல்பட 75 லட்ச ரூபாய் முதல் 1.50 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஸ்டேட் வங்கி, கேர்ள்ஸ் ஆயில், நைட், ஹூண்டாய், ஹெர்பாலைஃப் போன்ற பிராண்டுகளின் தூதராக இருந்து வருகிறார். இவர் ஒவ்வொரு பிராண்டுக்கும் தலா ஒன்றரை கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன.
November 04, 2025 3:19 PM IST


