Last Updated:
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 42 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளன. இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடர்ந்தபோது அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் 4 ரன்னிலும், குவின்டன் டி காக் 6 ரன்னிலும் அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி தடுமாறியது. அதைத் தொடர்ந்து இணைந்த டெவால்டு ப்ரெவிஸ் – டேவிட் மில்லர் இணை பொறுப்புடனும், அதிரடியாகவும் விளையாடி ரன்களை சேர்த்தது.
ப்ரெவிஸ் 45 ரன்களும், டேவிட் மில்லர் 63 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா அணி.
இதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் வெளியேற, அபிஷேக் சர்மா 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 42 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Feb 22, 2026 11:47 PM IST
உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வி.. தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது…


