Last Updated:
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கனடா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்கா அணி கனடா அணியை எளிதாக வென்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடத்தப்பட்டன.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் மார்க்ரம் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். டி காக் 25 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 33 ரன்கள் அடித்தார்.
கேப்டன் மார்க்ரம் அரைச்சதம் கடந்து 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 39 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 34 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கனடா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் தில்ப்ரீத் பாஜ்வா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். யுவராஜ் சாம்ரா 12 ரன்களும், நிகோலஸ் கிர்டோன் 4 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவா 9 ரன்களும் எடுத்தனர்.
Feb 09, 2026 10:46 PM IST


