ஆனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி 64 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் கண் மூடி திறப்பதற்குள் அடுத்த 37 ரன்களுக்கும் 5 விக்கெட்டை பறி கொடுத்தது. குறிப்பாக ஐதராபாத் அணியின் பார்ட் டைம் ஸ்பின்னரான ஷாபாஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆனால் இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் ஸ்பின்னர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய போது, உற்சாகத்தில் துள்ளி குதித்தார். அதிலும் ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்திய போது, அவரின் தந்தை கலாநிதி மாறனை பார்த்து விரல்களால் சைகை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். காவ்யா மாறனின் கொண்டாட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.


