ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி இறந்துவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றையதினம் (28) சனிக்கிழமை, அதிகாலை தாக்குதல் நடந்த நேரத்தில் தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது அவரது வீட்டில் உள்ள அலுவலகத்தில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கமேனியின் குடும்பம்
அமெரிக்க உளவுத்துறை அதிநவீன அமைப்புகள் மூலம் அவரது இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தாக்குதல்களின் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்த கமேனியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தையும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் இணைந்த ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, கமேனியின் மருமகளில் ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

