இவா்கள் தவிர, சோலாபூரைச் சோ்ந்த மகாதேவ் பவாா் (68), அவரது மனைவி ஆஷா (60) ஆகிய பயணிகளும் உயிரிழந்துவிட்டனா். லண்டனில் தங்களின் மகனைப் பாா்க்கச் சென்றபோது, விமான விபத்தில் சிக்கி இறந்துள்ளனா். விமான ஊழியா்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள உருக்கமான கதைகள், சோகம் நிறைந்தவையாக உள்ளன. பலரது கனவுகள், இந்த விபத்தில் சிதைத்துவிட்டன.

