Last Updated:
பேட்களில் ஒரு அடுக்கு ரப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயர் தர ரப்பர் பேட்டுகளை இந்திய வீரர்கள் பயன்படுத்துவதாகவும், இது மற்ற நாட்டு பேட்ஸ்மேன்களின் பேட்டுகளை விட வித்தியாசமானது என்றும் இலங்கை அணியின் பேட்ஸ்மேன பனுகா ராஜபக்சே சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை வீரர் பனுகா ராஜபக்சே இந்திய வீரர்களின் பேட்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்கள் மற்ற வீரர்கள் பயன்படுத்துவதை விட மிகவும் தரம் வாய்ந்தவை என்றும், அந்த பேட்களில் ஒரு அடுக்கு ரப்பர் ஒட்டப்பட்டிருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“மற்ற வீரர்களுக்குக் கிடைக்கும் சிறந்த பேட்களை விட இந்திய வீரர்களின் பேட்கள் மிகவும் உயர்ந்தவை. பணத்தைக் கொடுத்தாலும் அந்தத் தரத்திலான பேட்களை மற்றவர்களால் வாங்க முடியாது; இந்த வித்தியாசம் அனைத்து வீரர்களுக்கும் தெரியும்” என அவர் நியூஸ்வைர் என்ற செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


