• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தரகண்ட் நிலச்சரிவு: 70 போ் மாயம்; திடீா் வெள்ளப் பெருக்கால் புதைந்த கிராமத்தில் 4 போ் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
உத்தரகண்ட் நிலச்சரிவு: 70 போ் மாயம்; திடீா் வெள்ளப் பெருக்கால் புதைந்த கிராமத்தில் 4 போ் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது.

இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா். பாதிப்பு அதிகமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கீா் கங்கா நதியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு, அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கோத்ரி வழித்தடத்தில் முக்கிய நிறுத்தமான தராலி கிராமத்தில் செயல்பட்டு வந்த சுமாா் 20 முதல் 25 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவலறிந்து மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். இதுவரை 4 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் ஆா்யா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியிருப்பதால்ல, மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.

ராணுவத்துடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியான விடியோக்களில் சேறும், சகதியுமான வெள்ளநீா் மலைப்பகுதியிலிருந்து வேகமாகப் பாய்ந்து வருவதையும், மக்கள் அச்சத்தில் அலறுவதும் பதிவாகியுள்ளது.

இதுபோன்ற மோசமான பேரிடரை கண்டதில்லை என்று சம்பவத்தை நேரில் பாா்த்த 60 வயதான சுபாஷ் சந்திரா தெரிவித்தாா். பலத்த சப்தத்துடன் வெள்ள நீருடன், கற்களும் மிகவேகமாக வந்ததைக் கண்டு தராலி மாா்க்கெட் பகுதியிலிருந்து விரைந்து தப்பித்தகாவும், பலா் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் இரங்கல்: இந்தத் துயரமான நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் பேசி, களநிலவரத்தைக் கேட்டறிந்தேன்.

மாநில அரசின் கண்காணிப்பில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

களத்தில் மத்திய, மாநில அரசுகள்: மீட்புப் பணிகளுக்கு உதவ 7 தேசிய பேரிடா் மீட்புக் குழுக்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டாா்.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

துரிதமாக மீட்புப் பணிகள்-ராகுல்: தராலி பகுதியில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

அவா் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘மாயமானவா்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். மீட்புப் பணியில் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Read More

Previous Post

யாழில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்பு

Next Post

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது – நகை வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold price hike

Next Post
தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது – நகை வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold price hike

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது - நகை வியாபாரிகள் கூறுவது என்ன? | Gold price hike

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin