Last Updated:
குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலம் தேறி, இன்று மாநிலங்களவைக்குத் திரும்பினார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஓய்வுக்கு பிறகு இன்று மாநிலங்களவைக்குத் திரும்பினார்.
கடந்த 9 ஆம் தேதி நெஞ்சகப்பகுதியில் ஏற்பட்ட அசௌகர்யம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய தன்கர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
#WATCH | Vice President Jagdeep Dhankhar resumes his responsibilities as Chairman of Rajya Sabha today
He was discharged from AIIMS Delhi on March 12 after he was admitted to the hospital following complaints of uneasiness and chest pain on March 9.(Vide credit: Sansad… pic.twitter.com/cyiBwo7GQX
— ANI (@ANI) March 17, 2025
இந்த சூழலில் , நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர், ஓய்வுக்கு பிறகு திங்கட்கிழமை வழக்கமான அலுவல்களுக்கு திரும்பினார்.
இதையும் படிங்க | புதுச்சேரியில் நிரந்தர சாதி சான்றிதழ் திட்டம்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
உடல்நலம் தேறிய பின்பு மீண்டும் அவைக்கு வந்த தன்கர், உறுப்பினர்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். பதிலுக்கு உறுப்பினர்களும் தன்கரை மாநிலங்களவைக்குள் வரவேற்றனர். தன் உடல்நலம் விரைவில் குணமடைய பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தன்கர் கூறினார். தனது மனைவியைத் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து சோனியா காந்தி விசாரித்துள்ளதையும் தன்கர் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
March 17, 2025 8:58 PM IST
உடல்நலம் தேறி மீண்டும் மாநிலங்களவைக்கு திரும்பினார் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர்!


