
கோடைகாலக் கடுமையான வெப்பத்தைத் தணிப்பதற்காக; குடிநீரில் வெட்டிவேரைச் சேர்த்தல், கைகளில் மருதாணி வைத்தல் மற்றும் மசாலாக்கள் கலந்த மோர் குடித்தல் ஆகிய மூன்று பாரம்பரிய வழிகளை ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பரிந்துரைத்துள்ளார். அவை உடலுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பது பற்றிய விபரம் வருமாறு:
குளிர்விக்கக்கூடிய சில பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளும் இங்கு அவசியமாகின்றன.
நவீன மின்சார உபகரணங்களை மட்டுமே நம்பியிருக்காமல், அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து உடலையும் மனதையும் எவ்வாறு இயற்கையாகப் பாதுகாப்பது என்பது குறித்த மூன்று பாரம்பரிய இந்திய மருத்துவக் குறிப்புகளை, பாலிவுட் நடிகை கரீனா கபூரின் தனிப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர், கடந்த மே 26 அன்று தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது 3 முக்கிய பரிந்துரைகள்:
1. வெட்டிவேர் குடிநீர் (Vetiver / Wala Roots): முதலாவது ஆலோசனையாக, நாம் குடிக்கும் தண்ணீரில் வெட்டிவேர் வேர்களைப் போட்டு வைைக்குமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
2. இயற்கை மருதாணி (Natural Henna): இரண்டாவதாக, கைகளில் இயற்கையான மருதாணியை அரைத்து வைத்துக் கொள்வது உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.
3. மசாலா மோர் (Buttermilk with Spices): இறுதியாக, மசாலாப் பொருட்கள் கலந்த மோரைக் குடிப்பதன் மூலம், உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை (Electrolyte Balance) மீண்டும் சீரமைக்க முடிவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ருஜுதா திவேகரின் கூற்றுப்படி, இந்த மூன்று எளிய வழிகளும் கோடைகாலத்தில் உங்கள் உடலை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்திருக்கப் பெரிதும் உதவுகின்றன.
