• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம் | Shut down Parliament if Supreme Court makes laws: BJP MP slams judiciary

GenevaTimes by GenevaTimes
April 19, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம்: பாஜக எம்பி கண்டனம் | Shut down Parliament if Supreme Court makes laws: BJP MP slams judiciary
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் தமிழக ஆளுநர் தொடர்பான வழக்கில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஆளுநர் ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அண்மையில் கூறும்போது, “குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 142-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.

தற்போது வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அண்மையில் கூறும்போது, “நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரஸ் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? அது அவ்வளவு நன்றாக இருக்காது” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மக்களவைத் தொகுதி எம்பியுமான நிஷிகாந்த் துபே சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம். நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் நாடாளுமன்றவாதியாக முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

இதே விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “நாட்டின் மதரீதியிலான போரை உச்ச நீதிமன்றம் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி உச்ச நீதிமன்றம் செல்கிறது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடிவிடலாம்” என்று தெரிவித்துள்ளார்



Read More

Previous Post

உக்ரைனில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா : புடின் அதிரடி அறிவிப்பு

Next Post

IPL 2025 : கடைசி பந்துவரை நீடித்த த்ரில்லர் ஆட்டம்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது லக்னோ

Next Post
IPL 2025 : கடைசி பந்துவரை நீடித்த த்ரில்லர் ஆட்டம்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது லக்னோ

IPL 2025 : கடைசி பந்துவரை நீடித்த த்ரில்லர் ஆட்டம்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது லக்னோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin