இந்தநிலையில், உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது என்று கடுமையான சொற்களால் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் இன்று(ஏப். 19) அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது: “நாட்டில் மதத்தின் பெயரால் போர்கள் உருவாக உச்சநீதிமன்றம்தான் காரணம். உச்சநீதிமன்றம் தமது வரம்புகளை மீறி செயல்படுகிறது.

