புதிய இணைப்பு
தவெக ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில் 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளது.
முதலில், இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் தாமதமாகிறது.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆட்சியமைக்க திருமாவளவனிடம் ஆதரவு கோரி இன்று விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் தடுமாறி வருகின்றது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 116 இடங்கள் வரை தவெக உறுதி செய்திருந்தாலும், இன்னும் 2 இடங்கள் கிடைக்காததால் ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.
இதனால் இன்றைய திருமாவளவனுடனான சந்திப்பின் மூலம் விஜய் எதிர்பார்த்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கலாம் என்று தவெக தரப்பினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இது திருமா காலம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேற்று நிகழ்நிலை கூட்டம் வழியாக நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்றிரவு வரை அவர் எந்த பதிலையும் சொல்லவில்லை. அதேநேரம் விசிக நிர்வாகிகள் பலரும் தங்கள் சோஷியல் மீடீயா பக்கத்தில் ‘ஆட்சியில் அதிகாரம்’ என்றும், ‘இது திருமா காலம்’ என்றும் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் விஜய், இன்று திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கோருகிறார். இந்த சந்திப்பில், விஜய் உடனான கூட்டணியில் விசிகவுக்கு என்ன பலன் என்பது குறித்து பேசப்படக் கூடும். எனவே இந்த சந்திப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

