Last Updated:
NPS திட்டத்தை உங்களுடைய பணி ஓய்வு கால முதலீட்டில் கட்டாயமாக ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிகரிக்கும் ஆயுட்காலம் மற்றும் மாறிப்போகும் குடும்ப அமைப்புகளுக்கு மத்தியில் ஓய்வு கால திட்டமிடல் என்பது இனியும் விருப்பத்திற்கு ஏற்ற ஒன்று கிடையாது. மாறாக அது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான இந்தியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவது கிடையாது.
அப்படி திட்டமிட்டாலும் பாரம்பரியமான முதலீடுகளை நம்பி இருக்கிறார்கள் அல்லது தங்களுடைய குடும்பத்தின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். அதிகரிக்கும் மருத்துவ செலவுகள், வாழ்க்கை முறை மற்றும் தனிக்குடித்தனங்கள் போன்றவை ஓய்வு கால திட்டமிடலை ஒரு அவசியமாகக் கருத வைக்கிறது. இந்த இடத்தில்தான் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் ஒரு வலிமையான தீர்வாக நமக்கு கிடைக்கிறது.
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் என்பது சந்தையுடன் தொடர்புடைய பணி ஓய்வை குறிவைக்கும் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக அமைகிறது. நீங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே, உங்களுடைய ஓய்வு காலத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பணத்தை இந்த திட்டம் மூலமாக சேமித்து வைப்பீர்கள். இது பென்ஷன் ஃபண்ட் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (PFRDA) மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. ஆகையால் NPS திட்டத்தை உங்களுடைய பணி ஓய்வு கால முதலீட்டில் கட்டாயமாக ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் NPS என்பது மிகக் குறைவான முதலீட்டு ஆப்ஷன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. PFRDA நியமித்த அனுபவம் பெற்ற பென்ஷன் ஃபண்ட் மேனேஜர்கள் இந்த பணத்தை நிர்வகிக்கிறார்கள். இந்த சீரமைக்கப்பட்ட அமைப்பு மூலமாக உங்களுடைய முதலீடு தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிந்துகொள்வீர்கள், அதே சமயத்தில் முதலீட்டுத் தொகைக்கு பாதுகாப்பும் கிடைக்கும்.
வழக்கமான நிலையான வருமான கருவிகளோடு ஒப்பிடும்போது NPS என்பது நீண்ட கால ரிட்டன்களைத் தருகிறது. நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில் ஆக்டிவ் சாய்ஸ் அல்லது ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது, உங்களுக்கு வயதாக ஆக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறைந்து, கடன் கருவிகளில் முதலீடு செய்வதன் மூலமாக ரிட்டன்களை ஈடுகட்டுகிறது.
உங்களுடைய பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை ஒரு வருடத்திற்கு 4 முறை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை பென்ஷன் ஃபண்ட் மேனேஜரை மாற்றிக்கொள்ளலாம். ஆக்டிவ் மற்றும் ஆட்டோ சாய்ஸ் ஆப்ஷன்கள் இடையே எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
NPS திட்டம் பழைய வரிவிதிப்பு முறை மற்றும் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் பல்வேறு பலன்களை அளிக்கிறது. இதன் மூலமாக இந்தியாவில் அதிக வரி சார்ந்த பலன்கள் தரும் முதலீடுகளில் NPS மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது.
ஒவ்வொரு மாதமும் NPS திட்டத்தில் 5000 ரூபாயை மாத SIPல் முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 20 முதல் 30 வருடங்களில் உங்களுடைய பணம் ஒரு கோடி ரூபாயாக வளர்வதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளன. அதே சமயத்தில் இது வரி சார்ந்த பலன்களையும் தருகிறது. எனவே நீங்கள் ஓய்வு பெறும்போது ஒரு பெரிய அளவு தொகையை உங்கள் வசம் வைத்திருப்பீர்கள்.
உங்களுக்கு 60 வயது ஆகும்போது NPS திட்டத்தில் சேகரித்த பணத்தை வரி இல்லாமல் 60% வரை வித்டிரா செய்துகொள்ளலாம். மேலும் மீதமிருக்கும் 40 சதவீதத்தை வாழ்நாள் முழுவதும் வழக்கமான பென்ஷன் பெறுவதற்கு ஆண்டுவாரியான தொகையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
இந்த மொத்த அமைப்பும் டிஜிட்டல் ரீதியாக எனேபிள் செய்யப்பட்டு இருப்பதால் உங்களுடைய பணத்தை முதலீடு செய்வது கண்காணிப்பது மற்றும் நிர்வகிப்பது போன்ற அனைத்தையும் நீங்கள் ஆன்லைனில் செய்யலாம். NRIகள் மற்றும் OCIகள் கூட NPS திட்டங்களில் முதலீடு செய்யலாம். வேறு வேலை அல்லது ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு நீங்கள் மாற்றலாகிப் போனால் கூட NPS அக்கவுண்ட் உங்களுடனே இருக்கும். புதிய ஒன்றை நீங்கள் திறக்கத் தேவையில்லை.
July 14, 2025 6:05 PM IST


