வருமான வரி தாக்கல் செய்வதற்கு உங்களுடைய ஆதார் அட்டையுடன் PAN எண் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயம். ஒருவேளை உங்களுடைய PAN கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால், உங்களுடைய PAN செயலற்ற பிரிவில் சேர்க்கப்படும். எனவே, அதனை மீண்டும் செயல்படுத்துவதற்கு உங்களுடைய ஆதார் எண்ணுடன் அதனை இணைக்க வேண்டும். இதற்கு அரசு உங்களிடமிருந்து 1000 ரூபாய் பணத்தை வசூலிக்கும்.
ஆதார் மற்றும் PAN எண்ணை இணைப்பதற்கு நீங்கள் ஆதார் மையம், பொது சேவை மையம் செல்லலாம் அல்லது ஆன்லைனில் நீங்களே ஆதார் மற்றும் PAN எண்ணை இணைத்துக் கொள்ளலாம். ஆதார் மற்றும் PAN கார்டு இணைப்பது ஒரு எளிமையான செயல்முறை. அதனை நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகச் செய்துவிடலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

– இதற்கு நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
– அதில் ‘குயிக் லிங்க்ஸ்’ என்ற பிரிவின் கீழ் உள்ள ‘லிங்க் ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– உங்களுடைய PAN மற்றும் ஆதார் எண்ணைச் சரியாக உள்ளிட்டு, ‘வேலிடேட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
– இப்போது ஆதார் அட்டையில் இருக்கும் உங்களுடைய பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
– அடுத்து ‘லிங்க் ஆதார்’ என்பதைத் தட்டுங்கள்.
– பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குப் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட்டு, ‘வேலிடேட்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
– OTP சரிபார்க்கப்பட்டதும், உங்களுடைய ஆதார் மற்றும் PAN-ஐ இணைப்பதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.
பின்வரும் பட்டியலில் இருப்பவர்கள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்:
* 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்கள்.
* வெளிநாட்டில் உங்களுடைய பெயரில் ஏதேனும் சொத்து இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
* கடந்த நிதி ஆண்டில் போக்குவரத்துக்காக 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்திருப்பவர்கள்.
* குறிப்பிட்ட நிதி ஆண்டில் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள்.

* மொத்த வியாபாரம் அல்லது தொழில் ரசீதுகள் 60 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருந்தால்.
* குறிப்பிட்ட அந்த நிதி ஆண்டில் தொழில் மூலமாக வந்த மொத்த ரசீதுகள் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால்.
* வரி பிடித்தங்கள் 25,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் (சீனியர் சிட்டிசன்களுக்கு 50,000 ரூபாய்).
* சேமிப்புக் கணக்கில் 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டெபாசிட்.
* கரண்ட் அக்கவுண்டில் மொத்த டெபாசிட் தொகை ஒரு கோடி ரூபாயை விட அதிகமாக வைத்திருப்பவர்கள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை இதுவரை உங்களுடைய ஆதார் எண்ணுடன் PAN எண்ணை இணைக்காமல் வைத்திருந்தால், உடனடியாக அதனைச் செய்துவிடுங்கள்.
June 14, 2025 8:24 AM IST

