உக்ரைன் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போர், மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி பறவைகளின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் போர் நீடித்துவரும் இடங்களில் இருந்து கிடைத்துள்ள இரு பறவைகளின் கூடுகளை ஆய்வு செய்தவர்கள், அந்த கூடுகள், பைபர்-ஒப்டிக் கேபிள் மற்றும் புல்லால் உருவாக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து உள்ளனர்.
பறவைகளின் கூடுகட்டும் பொருட்களாக மாறிய கேபிள்கள்
மின்னணு ஜாமிங்கால் பாதிக்கப்படாத வகையில் வான்வழித் தாக்குதல் ட்ரோன்களை வழிநடத்த, உக்ரைன் மற்றும் ரஷ்யப் படைகள் இந்தக் கேபிள்களைப் பயன்படுத்துகின்றன.

போரால் முறிந்து கிடக்கும் கேபிள்கள் இப்போது பறவைகளின் கூடுகட்டும் பொருட்களில் ஒன்றாகி உள்ளது, அந்த பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


