பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைன் தயாரிப்பதற்கு அமெரிக்கா இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் யாராவது அவற்றை உருவாக்க அனுமதிப்பதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு உரிமம்
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தற்காத்து கொள்ள உதவும் வகையில் பேட்ரியாட் ஏவுகணை இடைமறிப்பான்களை தயாரிக்க உக்ரைனுக்கு உரிமம் வழங்கப் போவதாக அண்மையில் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், குறித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியுள்ள ட்ரம்ப், ஏவுகணைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ஆயுதங்களைப் பகிர்வது தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடினமான விடயம்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது நாங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அந்த வகையான தொழில்நுட்பத்தை விட்டுக்கொடுப்பது ஒரு கடினமான விடயம்.

Image Credit: PBS
இது ஒருபோதும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரிடம் அந்தத் தொழில்நுட்பத்தைக் கொடுக்கிறீர்களோ, அவர்கள் ஒருநாள் உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்,” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

