ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரிமியாவில் படுகொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டதாக ரஷ்யா குற்றம் சாட்டிய உக்ரைனிய இராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர், கடந்த மாதம் உக்ரைனில் கொல்லப்பட்டதாக ரஷ்யா இன்று(28)ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கேணல் ருஸ்டெம் ஃபக்ரியேவ்(Col. Rustem Fakhriyev) மே 18 அன்று உக்ரைனில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ் (Tass) செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக அதிகாரியை கொலை செய்ய சதி
கடந்த டிசம்பரில் கிரிமியாவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய நடந்த முயற்சியை ஃபக்ரியேவ் ஏற்பாடு செய்ததாக ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) குற்றம் சாட்டியதாக டாஸ் செய்தி வெளியிட்டது.

அதிகாரியின் காருக்கு அடியில் குண்டு வைத்துக்கொண்டிருந்த உக்ரைனிய உளவாளியை தங்கள் அதிகாரிகள் கொன்றதாக FSB அப்போது கூறியது.
பயங்கரவாத பட்டியலில் இணைப்பு
கடந்த ஆண்டு இறுதியில், ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனமான ரோஸ்ஃபின்மொனிட்டரிங் (Rosfinmonitoring), ஃபக்ரியேவை தனது பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.

ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் குறித்து உக்ரைன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

