இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகளுக்கான காத்திருப்பு நேரமும், அதன் கட்டணமும் ஏற்கனவே பல மடங்கு அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நகரங்களிலுள்ள மருத்துவ மையங்களில் பயன்பாட்டிலுள்ள பழைய ரக எம்.ஆர்.ஐ இயந்திரங்கள், திரவ ஹீலியம் மறுநிரப்பலை (Refill) முழுமையாக நம்பியுள்ளன. தற்போதைய உலகளாவிய விநியோகத் தட்டுப்பாட்டினால், இத்தகைய இயந்திரங்களே முதலில் செயலிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க நோயாளிகளின் மருத்துவ நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

