ஈரான் (Iran) யாருடைய ஆக்கிரமிப்புக்கும் அடிபணியாது என ஈரானிய உயர் மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை தனது உத்தியோகப்பூர்வ பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஈரான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை என அவர் மேலும், எந்த சூழ்நிலையிலும் யாரிடமிருந்தும் எந்தத் துன்புறுத்தலையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
யாருடைய துன்புறுத்தலுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம், இதுதான் ஈரானிய தேசத்தின் தர்க்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

