Last Updated:
ஈரான் மீது தாக்குதல் நடந்தால் பிராந்திய போர் வெடிக்கும் என காமேனி டிரம்புக்கு எச்சரிக்கை, டெஹ்ரானில் உரை, இஸ்தான்புல்லில் போராட்டம், நெதன்யாகு புகைப்படம் எரிப்பு.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பிராந்திய அளவிலான போராக வெடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அந்நாட்டு அரசு தண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அத்துடன், வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட சக்தி வாய்ந்த போர்க் கப்பல் ஈரான் நோக்கி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, அச்சுறுத்தல் மூலம் ஈரானிய மக்களை அசைத்துப் பார்க்க முடியாது என்று டிரம்புக்கு பதிலடி கொடுத்தார். ஈரானை தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் பிராந்திய அளவிலான போராக மாறும் என்றும் காமேனி எச்சரித்தார்.
இதற்கிடையே ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடைபெற்றது. அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் புகைப்படங்களை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை!


