ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் “அடுத்த கட்டத்திற்கு” தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஈரானிய ஆட்சியையும் அதன் இராணுவக் கட்டமைப்பையும் முழுமையாகச் சிதைப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஈயல் ஜமீர் (Eyal Zamir) நேற்று (5) மாலை உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பலவீனமான நிலைக்கும் கொண்டு செல்லுதல்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வான்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிறகு, இப்போது போரின் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறோம்.
இதில் ஈரானிய ஆட்சியின் அடித்தளங்கள் மற்றும் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும். எங்கள் கைகளில் மேலதிக ஆச்சரியமான நகர்வுகள் உள்ளன, அதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.

கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் மற்றும் CENTCOM இன் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் உள்ளிட்ட அமெரிக்க சகாக்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கின்றோம்.
நாங்கள் பகிரப்பட்ட நலன்கள் மற்றும் மதிப்புகளுக்காகப் போராடுகிறோம். ஒத்திசைக்கப்பட்ட நடவடிக்கையில், ஆட்சியின் இராணுவத் திறன்களை அகற்றி, அதை மூலோபாய தனிமைப்படுத்தலுக்கும், அது முன்பு அனுபவித்திராத பலவீனமான நிலைக்கும் கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

