“ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது… மனசாட்சிக்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் ஈரான் போரை ஆதரிக்க முடியாது…”
– என்று கூறி நேற்று முன்தினம் தனது அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஜோ கென்ட்.
“ஈரான் திரும்ப தாக்குதல் நடத்தும் என்று தெரிந்து தான் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.
தங்களால் போரை தொடங்க முடியும் என்றும், அதற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றினால் மட்டும் போதும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அரசுக்கு நன்கு தெரியும்.
இப்போதும் சரி… கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போதும் சரி… ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவில்லை.
