அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்குப் பதிலளிக்க ஈரானுக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமுகமான தீர்வு
தங்களது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திய ட்ரம்ப், அவ்வாறு நிகழாத பட்சத்தில் அடுத்தகட்டமாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

Image Credit: The Round Table
எவ்வாறாயினும், ஈரான் தரப்பு தற்போது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்புவதாகவும், விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முதன்மை கோரிக்கை
முக்கியமாக, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முதன்மை கோரிக்கையை அந்த நாடு ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈரானிய தரப்பிலிருந்து இணக்கமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
