ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் அவரை கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கையை ஆதரிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முக்கிய கோரிக்கை, ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பதாகும்.
இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மொஜ்தபா கமேனியை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ட்ரம்ப் அதிருப்தி
முன்னதாக, ஈரானின் முன்னாள் உச்சர தலைவர் அலி கமேனி கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தெஹ்ரானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.அதன் பின்னர் அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தை குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்ததுடன், “அவர் அமைதியாக வாழ முடியாது” எனவும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, கொல்லப்படுவதற்கு முன்பு அலி கமேனி தனது மகன் தன்னைத் தொடர்ந்து பதவி ஏற்க வேண்டாம் என்று தனது விருப்பத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் சில சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

