
. காமேனி தரைக்கு அடியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்ததால், அதைத் துளைத்துச் செல்ல பல குண்டுகள் தேவைப்பட்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய திட்டமிட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்குத் தேவையான முக்கிய உளவுத் தகவல்கள் அமெரிக்காவின் சிஐஏ (CIA) அமைப்பால் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நேரடியாக நடத்தியுள்ளது.
இந்த அதிரடித் தாக்குதல் சனிக்கிழமை காலை மத்திய தெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்தில் அவர் இருந்தபோது நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய போர் விமானங்கள், சுமார் 30 குண்டுகளைப் பயன்படுத்தி அந்த வளாகத்தைத் தாக்கின. காமேனி தரைக்கு அடியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்ததால், அதைத் துளைத்துச் செல்ல பல குண்டுகள் தேவைப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோவிலிருந்து இந்த நடவடிக்கையைக் கண்காணித்தார்.
இந்தத் தாக்குதலில் காமேனியுடன் சேர்த்து ஈரானின் மூன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷாம்கானி.
பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே.
ஐஆர்ஜிசி (IRGC) தளபதி ஜெனரல் முகமது பாக்பூர்.
அதேசமயம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, டுபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், ஹார்முஸ் நீரிணை அருகே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

